மயக்கம்
 
22. அம் மூ-ஆறும் வழங்கு இயல் மருங்கின்,
மெய்ம்மயக்கு, உடனிலை, தெரியும் காலை.
உரை
   
23. ட, ற, ல, ள, என்னும் புள்ளி முன்னர்,
க, ச, ப, என்னும் மூஎழுத்து உரிய.
உரை
   
24. அவற்றுள்,
லளஃகான் முன்னர், யவவுந் தோன்றும்.
உரை
   
25. ங, ஞ, ண, ந, ம, ன, எனும் புள்ளி முன்னர்,
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே.
உரை
   
26. அவற்றுள்,
ண-னஃகான் முன்னர்,
க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய.
உரை
   
27. ஞ, ந, ம, வ என்னும் புள்ளி முன்னர்,
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே.
உரை
   
28. மஃகான் புள்ளி முன் `வ'வ்வும் தோன்றும். உரை
   
29. ய, ர, ழ, என்னும் புள்ளி முன்னர்,
முதல் ஆகு எழுத்து, ஙகரமொடு தோன்றும்.
உரை
   
30. மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும்
தம் முன் தாம் வரூஉம்-ர, ழ, அலங்கடையே.
உரை
   
31. அ, இ, உ அம் மூன்றும் சுட்டு. உரை
   
32. ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா. உரை
   
33. அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும்,
`உள' என மொழிப;-`இசையொடு சிவணிய
நரம்பின் மறைய' என்மனார் புலவர்.
உரை