| தொடக்கம் | ||
| மயக்கம்
|
||
| 22. | அம் மூ-ஆறும் வழங்கு இயல் மருங்கின், மெய்ம்மயக்கு, உடனிலை, தெரியும் காலை. |
உரை |
| 23. | ட, ற, ல, ள, என்னும் புள்ளி முன்னர், க, ச, ப, என்னும் மூஎழுத்து உரிய. |
உரை |
| 24. | அவற்றுள், லளஃகான் முன்னர், யவவுந் தோன்றும். |
உரை |
| 25. | ங, ஞ, ண, ந, ம, ன, எனும் புள்ளி முன்னர், தம்தம் இசைகள் ஒத்தன நிலையே. |
உரை |
| 26. | அவற்றுள், ண-னஃகான் முன்னர், க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய. |
உரை |
| 27. | ஞ, ந, ம, வ என்னும் புள்ளி முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே. |
உரை |
| 28. | மஃகான் புள்ளி முன் `வ'வ்வும் தோன்றும். | உரை |
| 29. | ய, ர, ழ, என்னும் புள்ளி முன்னர், முதல் ஆகு எழுத்து, ஙகரமொடு தோன்றும். |
உரை |
| 30. | மெய்ந் நிலை சுட்டின் எல்லா எழுத்தும் தம் முன் தாம் வரூஉம்-ர, ழ, அலங்கடையே. |
உரை |
| 31. | அ, இ, உ அம் மூன்றும் சுட்டு. | உரை |
| 32. | ஆ, ஏ, ஓ அம் மூன்றும் வினா. | உரை |
| 33. | அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், `உள' என மொழிப;-`இசையொடு சிவணிய நரம்பின் மறைய' என்மனார் புலவர். |
உரை |