இடம்
 
28. 'செலவினும், வரவினும், தரவினும், கொடையினும்,
நிலை பெறத் தோன்றும் அந் நாற் சொல்லும்
தன்மை, முன்னிலை, படர்க்கை, என்னும்
அம் மூஇடத்தும் உரிய' என்ப.
உரை
   
29. அவற்றுள்,
தரு சொல், வரு சொல், ஆயிரு கிளவியும்
தன்மை, முன்னிலை, ஆயீரிடத்த .
உரை
   
30. ஏனை இரண்டும் ஏனை இடத்த. உரை
   
31. `யாது, எவன்' என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்.
உரை
   
32. அவற்றுள்,
`யாது' என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத்
தெரிந்த கிளவி ஆதலும் உரித்தே.
உரை
   
33. இனைத்து என அறிந்த, சினை, முதல், கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் .
உரை
   
34. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே . உரை
   
35. எப் பொருளாயினும், 'அல்லது இல்' எனின்,
அப் பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல்!.
உரை
   
36. அப் பொருள் கூறின், சுட்டிக் கூறல்!. உரை
   
37. பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும்,
பொருள் வேறுபடாஅது ஒன்று ஆகும்மே.
உரை
   
38. 'இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்
வினைக்கு ஒருங்கு இயலும் காலம் தோன்றின்,
சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்;
இயற்பெயர் வழிய' என்மனார் புலவர்.
உரை
   
39. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே . உரை
   
40. சுட்டு முதல் ஆகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்.
உரை
   
41. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.
உரை
   
42. ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி,
தொழில் வேறு கிளப்பின், ஒன்று இடன் இலவே .
உரை
   
43. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி என்று
எண்ணுவழிமருங்கின் விரவுதல் வரையார்.
உரை