சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு
 
34. குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்-
`யா' என் சினைமிசை, உரையசைக் கிளவிக்கு,
ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே.
உரை
   
35. புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே;
உணரக் கூறின், முன்னர்த் தோன்றும்.
உரை
   
36. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்
குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே.
உரை
   
37. இடைப்படின், குறுகும் இடனுமார் உண்டே-
கடப்பாடு அறிந்த புணரியலான.
உரை
   
38. குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி,
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே.
உரை
   
39. ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். உரை
   
40. உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா-
ஆய்தம் அஃகாக் காலையான.
உரை