வேற்றுமையுருபுகள் மயங்குதல்
 
84. கருமம் அல்லாச் சார்பு' என் கிளவிக்கு
உரிமையும் உடைத்தே, `கண்' என் வேற்றுமை .
உரை
   
85. சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
வினை நிலை ஒக்கும்' என்மனார் புலவர்

உரை
   
86. கண் கன்றல் பொருண்மேல் வருஞ் சொல்லும் செலவு . உரை
   
87. முதற்சினைக் கிளவிக்கு 'அது' என் வேற்றுமை
முதற்கண் வரினே, சினைக்கு ஐ வருமே.
உரை
   
88. முதல் முன் ஐ வரின், `கண்' என் வேற்றுமை
சினை முன் வருதல் தெள்ளிது' என்ப.
உரை
   
89. முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ;
நுவலும் காலை, சொற்குறிப்பினவே .
உரை
   
90. பிண்டப் பெயரும் ஆயியல் =திரியா;
பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே .
உரை
   
91. ஒரு வினை ஒடுச் சொல் உயர்பின் வழித்தே . உரை
   
92. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கு ஓரனைய' என்மனார் புலவர் .
உரை
   
93. இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம், அவ்
இரண்டன் மருங்கின், ஏதுவும் ஆகும்.
உரை
   
94. அது' என் வேற்றுமை உயர்திணைத்தொகைவயின்,
`அது' என் உருபு கெட, குகரம் வருமே .
உரை
   
95. தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடி நிலை இலவே, பொருள்வயினான.
உரை
   
96. ஈற்றுப் பெயர் முன்னர் மெய் அறி பனுவலின்,
வேற்றுமை தெரிப, உணருமோரே.
உரை
   
97. ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும்
தாம் பிரிவு இலவே, தொகை வரு காலை.
உரை
   
98. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு
ஏழும் ஆகும், உறை நிலத்தான.
உரை
   
99. குத் தொக வரூஉம் கொடை எதிர் கிளவி
அப் பொருள் ஆறற்கு உரித்தும் ஆகும்
உரை
   
100. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே, பொருள்வயினான

உரை
   
101. அன்ன பிறவும் தொல் நெறி பிழையாது,
உருபினும் பொருளினும் மெய் தடுமாறி,
இரு வயின் நிலையும் வேற்றுமை எல்லாம்
திரிபு இடன் இலவே, தெரியுமோர்க்கே.
உரை