உயர்திணைப் பெயர் விளியேற்குமாறு
 
120. அவைதாம்,
இ, உ, ஐ, ஓ, என்னும் இறுதி
அப் பால் நான்கே-உயர்திணைமருங்கின்
மெய்ப் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே.
உரை
   
121. அவற்றுள்,
இ ஈ ஆகும்; ஐ ஆய் ஆகும்.
உரை
   
122. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் . உரை
   
123. உகரம்தானே குற்றியலுகரம் . உரை
   
124. ஏனை உயிரே உயர்திணை மருங்கின்
தாம் விளி கொள்ளா' என்மனார் புலவர்.
உரை
   
125. அளபெடை மிகூஉம் இகர இறு பெயர்
இயற்கைய ஆகும் செயற்கைய' என்ப.
உரை
   
126. முறைப் பெயர் மருங்கின் ஐ என் இறுதி
ஆவொடு வருதற்கு உரியவும் உளவே.
உரை
   
127. அண்மைச் சொல்லே இயற்கை ஆகும். உரை
   
128. ன, ர, ல, ள, என்னும் அந் நான்கு' என்ப-
'புள்ளி இறுதி விளி கொள் பெயரே'.
உரை
   
129. ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா . உரை
   
130. அவற்றுள்,
'அன்' என் இறுதி ஆ ஆகும்மே.
உரை
   
131. அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும். உரை
   
132. ஆன்' என் இறுதி இயற்கை ஆகும் . உரை
   
133. தொழிலின் கூறும் 'ஆன்' என் இறுதி
ஆய் ஆகும்மே, விளிவயினான.
உரை
   
134. பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே . உரை
   
135. அளபெடைப் பெயரே அளபெடை இயல . உரை
   
136. முறைப் பெயர்க் கிளவி ஏயொடு வருமே. உரை
   
137. தான்' என் பெயரும், சுட்டுமுதற்பெயரும்,
`யான்' என் பெயரும், வினாவின் பெயரும்,
அன்றி அனைத்தும் விளி கோள் இலவே .
உரை
   
138. ஆரும் அருவும் ஈரொடு சிவணும் . உரை
   
139. 'தொழிற்பெயர் ஆயின், ஏகாரம் வருதலும்
வழுக்கு இன்று' என்மனார், வயங்கியோரே.
உரை
   
140. பண்பு கொள் பெயரும் அதன் ஓரற்றே . உரை
   
141. அளபெடைப் பெயரே அளபெடை இயல . உரை
   
142. சுட்டுமுதற் பெயரே முன் கிளந்தன்ன . உரை
   
143. நும்மின் திரிபெயர், வினாவின் பெயர், என்று
அம் முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும்.
உரை
   
144. எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும்.
உரை
   
145. அயல் நெடிதுஆயின், இயற்கை ஆகும் . உரை
   
146. வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் 'ஆள்' என் இறுதி
ஆய் ஆகும்மே, விளிவயினான .
உரை
   
147. முறைப் பெயர்க் கிளவி முறைப் பெயர் இயல. உரை
   
148. சுட்டுமுதற்பெயரும் வினாவின் பெயரும்
முன் கிளந்தன்ன' என்மனார் புலவர்.
உரை
   
149. அளபெடைப் பெயரே அளபெடைப் பெயர். உரை