தொடக்கம் | ||
புறனடை
|
||
152. | உள எனப்பட்ட எல்லாப் பெயரும், அளபு இறந்தனவே, விளிக்கும் காலை, சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான. |
உரை |
153. | `அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம் முறைப்பெயரொடு சிவணாதுஆயினும், விளியொடு கொள்ப' தெளியுமோரே. |
உரை |
154. | த, ந, நு, எ ,என அவை முதல் ஆகித் தன்மை குறித்த ன, ர, ள, என் இறுதியும், அன்ன பிறவும், பெயர் நிலை வரினே, இன்மை வேண்டும், விளியொடு கொளலே. |
உரை |