சொற்களின் இயல்பு
 
155. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. உரை
   
156. பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர் .
உரை
   
157. தெரிபு வேறு நிலையலும், குறிப்பின் தோன்றலும்,
இரு பாற்று' என்ப 'பொருண்மை நிலையே' .
உரை
   
158. சொல் எனப்படுப பெயரே, வினை, என்று
ஆயிரண்டு' என்ப, அறிந்திசினோரே .
உரை
   
159. இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும்,
அவற்று வழி மருங்கின் தோன்றும்' என்ப .
உரை