தொடக்கம் | ||
உயர்திணை வினை
|
||
202. | அவைதாம், அம், ஆம், எம், ஏம், என்னும் கிளவியும், உம்மொடு வரூஉம் க, ட, த, ற, என்னும் அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும் பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. |
உரை |
203. | க, ட, த, ற, என்னும் அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு, என், ஏன், அல், என வரூஉம் ஏழும் தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. |
உரை |
204. | அவற்றுள், "செய்கு" என் கிளவி வினையொடு முடியினும், அவ் இயல் திரியாது' என்மனார் புலவர். |
உரை |
205. | அன், ஆன், அள், ஆள், என்னும் நான்கும் ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. |
உரை |
206. | அர், ஆர், ப, என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே. |
உரை |
207. | மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை; காலக் கிளவியொடு முடியும் என்ப. |
உரை |
208. | பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த அந் நால்-ஐந்தும் மூன்று தலை இட்ட முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே. |
உரை |
209. | அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண் இயல் மருங்கின் திரிபவை உளவே. |
உரை |
210. | யாஅர் என்னும் வினாவின் கிளவி அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே. |
உரை |
211. | பால் அறி மரபின் அம் மூஈற்றும் ஆ ஓ ஆகும், செய்யுளுள்ளே. |
உரை |
212. | ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும். | உரை |
213. | அதுச் சொல் வேற்றுமை உடைமையானும், 'கண்' என் வேற்றுமை நிலத்தினானும், ஒப்பினானும், பண்பினானும், என்று அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும். |
உரை |
214. | அன்மையின், இன்மையின், உண்மையின், வன்மையின், அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். |
உரை |
215. | பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை ருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே. |
உரை |