சொல்லும் பொருளும்
 
389. மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம்
முன்னும் பின்னும் வருபவை நாடி,
ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல்
தம்தம் மரபின் தோன்றும்மன் பொருளே.
உரை
   
390. கூறிய கிளவிப் பொருள் நிலை அல்ல
வேறு பிற தோன்றினும், அவற்றொடு கொளலே!.
உரை
   
391. பொருட்குப் பொருள் தெரியின், அது வரம்பு இன்றே. உரை
   
392. பொருட்குத் திரிபு இல்லை, உணர்த்த வல்லின். உரை
   
393. உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே. உரை
   
394. மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. உரை
   
395. எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றே. உரை