எழுத்துக்களின் இயக்கம்
 
46. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும். உரை
   
47. தம் இயல் கிளப்பின், எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.
உரை
   
48. ய, ர, ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற,
க, ச, த, ப, ங, ஞ, ந, ம ஈர் ஒற்று ஆகும்.
உரை
   
49. அவற்றுள்,
ரகார, ழகாரம் குற்றொற்று ஆகா.
உரை
   
50. குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின்,
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.
உரை
   
51. செய்யுள் இறுதிப் போலும் மொழிவயின்
னகார, மகாரம் ஈர் ஒற்று ஆகும்.
உரை
   
52. னகாரை முன்னர் மகாரம் குறுகும். உரை
   
53. மொழிப்படுத்து இசைப்பினும், தெரிந்து வேறு இசைப்பினும்,
எழுத்து இயல் `திரியா' என்மனார் புலவர்.
உரை