சொற்களின் வகை
 
397. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று
அனைத்தே-செய்யுள் ஈட்டச் சொல்லே.
உரை
   
398. அவற்றுள்,
இயற்சொல்தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி,
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.
உரை
   
399. ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்,
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்,
இரு பாற்று' என்ப-'திரிசொல்-கிளவி'.
உரை
   
400. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே-திசைச்சொல்-கிளவி.
உரை
   
401. வடசொல்-கிளவி வட எழுத்து ஓரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
உரை
   
402. சிதைந்தன வரினும், இயைந்தன வரையார். உரை
   
403. அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை,
வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும்,
நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழிக் குறுக்கலும்,
நாட்டல் வலிய' என்மனார் புலவர்.
உரை