பொருள்கோள்
 
404. நிரல்-நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று,
அவை நான்கு' என்ப-'மொழி புணர் இயல்பே.
உரை
   
405. அவற்றுள்,
நிரல்-நிறைதானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றி,
சொல் வேறு நிலைஇ, பொருள் வேறு நிலையல்.
உரை
   
406. சுண்ணம்தானே
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்
ஒட்டு வழி அறிந்து, துணித்தனர் இயற்றல்.
உரை
   
407. அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து,
சீர் நிலை திரியாது, தடுமாறும்மே.
உரை
   
408. பொருள் தெரி மருங்கின்
ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார், அடிமறியான.
உரை
   
409. மொழிமாற்று இயற்கை
சொல் நிலை மாற்றி, பொருள் எதிர் இயைய,
முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல்!.
உரை