சில மரபு வகை
 
442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்!. உரை
   
443. மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல்!. உரை
   
444. 'ஈ, தா, கொடு' எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய.
உரை
   
445. அவற்றுள்,
'ஈ' என் கிளவி இழிந்தோன் கூற்றே.
உரை
   
446. 'தா' என் கிளவி ஒப்போன் கூற்றே. உரை
   
447. 'கொடு' என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. உரை
   
448. 'கொடு என் கிளவி படர்க்கைஆயினும்,
தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும்' என்மனார் புலவர்.
உரை
   
449. பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்,
திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும்,
தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்,
மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்,
மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்,
அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே.
உரை
   
450. 'செய்யாய்' என்னும் முன்னிலை வினைச்சொல்
'செய்' என் கிளவி ஆகு இடன் உடைத்தே.
உரை
   
451. முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே.
உரை
   
452. கடி சொல் இல்லை, காலத்துப் படினே. உரை
   
453. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல்!. உரை
   
454. குறைந்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. உரை
   
455. இடைச் சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. உரை
   
456. உரிச் சொல் மருங்கினும் உரியவை உரிய. உரை
   
457. வினை எஞ்சு கிளவியும் வேறு பல் குறிய. உரை
   
458. உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்!. உரை
   
459. முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே,
இன்ன என்னும் சொல்முறையான.
உரை
   
460. ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். உரை
   
461. ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே.
உரை
   
462. முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே;
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்.
உரை