பக்கம் எண் :
தொடக்கம்
106தொல்காப்பியம் - உரைவளம்

இது  நின்  தமர்  வாராமையின்  எமர்  வரைவு  நேர்ந்தில  ரென்று  தோழி  கூறக்கேட்ட  தலைவன்
தலைவிக்குக் கூறியது.
  

இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன.
  

இக்காட்டிய வெல்லாம் ஐங்குறு நூறு
‘புனையிழை நோக்கியும்’ என்னும் மருதக் கலியும் அது
 

“முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்
மூதா தின்ற லஞ்சிக் காவலர்
பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந்
தீம்புன லூர திறவ தாகக்
குவளை யுண்க ணிவளும் யானுங்
கழினி யாம்பன் முழுநெறிப் பகைத்தழை
காயா ஞாயிற் றாகத் தலைப்பெய்ப்
பொய்த லாடிப் பொலிகென வந்து
நின்னகர்ப் பிழைத்த தவறோ பெரும
கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித்
தணிமருங் கறியாள் யாஅயழ
மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே.”

(அகம்-156)
  

இது தலைவியைத் தோழி இடத்துய்த்துத் தலைவனை வரைவு கடாயது இவ்வகப்பாட்டும் அது.3
  

இன்னும்     மயக்குறுதலும்  என்றதனான்  அவ்வந்   நிலங்கட்கு   உரிய  முதலுங்  கருவும்  வந்து
உரிப்பொருள்  வேறாதலன்றி  அவ்வந்நிலங்கட்கு  உரியவல்லாத  முதலுங்  கருவும்  வந்து உரிப்பொருள்
மயங்குவனவும்  கொள்க.  அஃது  ‘அயந்திகழ்  நறுங்கொன்றை’  என்னும்   நெய்தற்   கலியுட்  காண்க.
இக்கருத்தானே நக்கீரரும் ஐந்திணையுள்ளுங்களவு நிகழுமென்று கொண்டவாறுணர்க.


3. மருதத்துக்குறிஞ்சி தீம்புனலூர என்றது மருதம் இடத்துய்த்தலும் வரைவுகடாதலும் குறிஞ்சி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்