கல்லா வுமணர்க்குத் தீமுட் டாகுந் துன்புறு தகுந வாங்கட் புன்கோட் டரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ வெள்ளரா மிளிர வாங்கும் பிள்ளை யெண்கின் மலைவயி னானே.” |
(அகம்-257) |
இது கொண்டுதலைக்கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது. இஃது அகம். |
‘அழிவிலர் முயலும்’ என்பது பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது. |
இனித் தலைவி பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின் ‘இரங்கினும்’ எனச்சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப் பொருட்கண் இரங்கற் பொருள் நிகழுமென்றார் உதாரணம். |
“ஒங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன வூன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை யறுகோட் டுழைமா னாண்குர லோர்க்கு நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந் துண்ணா வுயக்கமொ டுயிர்செலச் சாஅய்த் தோளுந் தொல்கவின் றொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்துபிறி தின்மையி னிருந்தும்வினை யிலனே.” |
(அகம்-147) |
இதனுள் வெள்ளி வீதியைப்போலச் செல்லத் துணிந்து, யான் பலவற்றிற்கும் புலந்திருந்து, பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்து பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர் செயச் சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடு பற்றி யுணர்க. இஃது அகம். |