இது, கருப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) தெய்வம் உணா மாமரம் புள் பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ-தெய்வம் முதலாகச் சொல்லப்பட்டனவும், அவ்வகை பிறவும் கரு என மொழிப-அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுப. |
அவையாவன முதற்பொருட்கண் தோன்றும் பொருள்கள்1. |
“மாயோன் மேய காடுறை உலகம்” |
(அகத்-5) |
என்றதனால் |
முல்லைக்குத் தெய்வம் கண்ணன். |
“காடுறை உலகம்”. |
என்றதனானுங், |
“காரும் மாலையும் முல்லை” |
(அகத்-6) |
என்றதனானும், காட்டினும் கார்காலத்தினும் மாலைப்பொழுதினும் நிகழ்பவை2 கொள்க. |
‘எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்.’ |
(அகத்-21) |
என்றதனானும், நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்பது உணர்க. |
உணவு - வரகும் முதிரையும்3. மா - மானும் முயலும், மரம் - கொன்றையும் குருந்தும் புதலும். புள் - கானாங்கோழி, பறை - ஏறுகோட்பறை, செய்தி - நிரை மேய்த்தல், யாழின் பகுதி என்பது பண். அது சாதாரி, பிறவும் என்றதனால், பூ - முல்லையும் பிடவும் தளவும், நீர் - கான்யாறு, பிறவும் இந்நிகரன கொள்க. |
குறிஞ்சிக்குத் தெய்வம் முருகவேள், மை வரையுலகமும் கூதிர் காலமும் நள்ளிருளும் கூறினமையான், அந்நிலத்தினும் காலத்தினும் நிகழ்பவை கொள்க. உணவு - திணையும் |
|
1. கருப்பொருள்-தோன்றும்பொருள்.
2. நிகழ்பவை-கருப்பொருளின் நிகழ்ச்சிகள்
3. முதிரை-பயறுவகை |