பக்கம் எண் :
தொடக்கம்
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை சூ.20159

பாலையாழென     வேறு   வருதல்  கொள்க.2  ‘அவ்வகை பிறவும்’  என்றதனான் எடுத்தோதிய தெய்வம்
ஒழிய   அவற்றுள்  உட்பகுதியாகிய  தெய்வமும்   உள. அவை  ‘மாயோன்மேய’  (5) என்புழிக்காட்டினாம்
இதனானே பாலைக்குத்  தெய்வமும்  இன்றாயிற்று.  இன்னும்  ‘அவ்வகை’  என்றதனானே பாலைக்கு நிலம்
பற்றாது  காலம்   பற்றிக்   கருப்பொருள்  வருங்கால்  தம்மியல்பு  திரியவருவனவும்3 வருமென்று கொள்க
‘எந்நில  மருங்கிற்   பூ’  ( 19)  என்பதனாற்  பூவும்  புள்ளும் வரைவின்றி மயங்குமெனவே ஒழிந்த கருவும்
மயங்குமென்பது    ‘சூத்திரத்துப்   பொருளன்றியும்’   (659)   என்பதனான்4   உரையிற்   கொள்க.  அது
‘அயந்திகழ் நறுங் கொன்றை’ என்னும் நெய்தற்கலியுட்5 காண்க.
  

முல்லைக்கு   உணா,   வரகும்   சாமையும்  முதிரையும்;  மா,  உழையும்  புல்வாயும்  முயலும்;  மரம்,
கொன்றையுங்    குருந்தும்;    புள்,   கானக்கோழியுஞ்   சிவலும்;  பறை,  ஏறுகோட்பறை;  செய்தி,  நிரை
மேய்த்தலும்  வரகு  முதலியன  களை  கட்டலுங் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ், பிறவுமென்றதனால் பூ,
முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர், கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும்.
  

குறிஞ்சிக்கு     உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையும் கரடியும்
பன்றியும்;  மரம்  அகிலும்  ஆரமுந்  தேக்குந்  திமிசும்  வேங்கையும்;  புள், கிளியும், மயிலும் பறை,
முருகியமுந் தொண்டகப் பறையும்; செய்தி  


2. பாலை  தனி  நிலமன்மையின்  மாமரம்  முதலியன குறிஞ்சி முல்லைக்குரியன திரிந்துவரும். ஆனால்
யாழ் அவ்வாறு குறிஞ்சி யாழும் முல்லையாழும் வாராமல் பாழையாழ் ஒன்று சிறப்பாகவே வரும் என்க.
பாலை யாழ்-பாலைப்பண்
  

3. தம் இயல்பு திரிய வருவன வலியற்ற புலி நாய் யானை முதலியன.
  

4. ‘சூத்திரத்துப்  பொருளன்றியும்’  ( )  என்னும்  சூத்திரம்,  சூத்திரத்திற்கூறப்பட்ட பொருளேயல்லாமல்
சொல்லப்படாத  அவ்வவ்விடங்களுக்குத் தேவையான. பிறபொருள்களையும் ஆங்காங்கே கூறிக்கொள்க
என்பது கூறலின் அதன்படி உரையிற் கூறிக்கொள்க.
  

5. நெய்தற்கலி  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்