பக்கம் எண் :
தொடக்கம்
182தொல்காப்பியம் - உரைவளம்

(இ-ள்)  ஏனோர்  மருங்கினும்  எண்ணும்  காலை  -  ஏனை  நிலத்துள்ள  மக்கண்மாட்டும் ஆராயுங்
காலத்து, ஆன் அ வகைய திணை நிலைப்பெயர் - அவ்விடத்து அவ்வகைய திணை நிலைப்பெயர்.
  

என்றது,   திணைதொறும்  குலப்பெயரும்  தொழிற் பெயரும் கிழவர் பெயரும் வரும் என்றவாறு1. ஆன்
என்பது   அவ்விடம்;   அ   என்னும்  சுட்டு  நீண்டிசைத்தது.  அவை வருமாறு:- குறிஞ்சிக்கு மக்கட்பெயர்
குறவன்  குறத்தி   என்பன   தலை  மக்கட்பெயர்:  மலைநாடன் வெற்பன் என்பன பாலைக்கு மக்கட்பெயர்;
எயினர்   எயிற்றியர்   என்பன;    தலைமக்கட்பெயர்,    மீளி விடலை என்பன. மருதத்திற்கு மக்கட்பெயர்;
உழவர்   உழத்தியர்  என்பன;   தலைமக்கட்பெயர்   ஊரன்   மகிழ்நன்  என்பன நெய்தற்கு மக்கட்பெயர்,
நுளையர்  நுளைச்சியர்  என்பன;  தலைமக்கட்  பெயர்  சேர்ப்பன்  துறைவன் கொண்கண் என்பன. பிறவும்
அன்ன.
  

“கைக்கிளை     முதலா”  (அகத்-1)  என்னும்  சூத்திரம்  முதலாக  இத்துணையும்  கூறப்பட்டது.
நடுவணைந்திணை  நிலத்தானும்  காலத்தானும்  கருப்பொருளானும் உரிப்பொருளானும் நிலமக்களானும்
தலைமக்களானும்  வரும்  எனவும்,  அவை  இலக்கண நெறியானும் வழக்குநெறியானும்2 வரும் எனவும்,
கைக்கிளை   பெருந்திணை  உரிப்பொருளான்  வரும்  எனவும்,  அகத்திணை  ஏழிற்கும்  இலக்கணம்
ஓதியவாறு.
  

உதாரணம்  

முல்லைத் திணைக்குச் செய்யுள்
  

“முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புறக் கொடுப்பக்
கருவி வானம் கதமுறை சிதறிக்
  


1. இத்தொடர் முன் இரு சூத்திரங்களாற் பெறப்பட்ட தெளிந்த கருத்தாகும்.
  

2. வழக்கு-நாடக வழக்கு, உலகியல் வழக்கு  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்