பக்கம் எண் :
தொடக்கம்
230தொல்காப்பியம் - உரைவளம்

படாஅப் பைங்கட் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்
பெய்துவறி தாகிய பொங்கு செலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப்
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலைக்
கைதொழு மரபிற் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின்
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நன்பக லொழித்த
பீடின் மன்னர் போல
ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே”.
  

  (அகம்-125)
 

சேரன்     செங்குட்டுவனார்   கண்ணகியைக்   கடவுள்   மங்கலம்    செய்தற்குப்   பிரிந்த   பிரிவு
சிலப்பதிகாரத்திற்  கண்டு  கொள்க.  இத்துணையும் பிரிவு அறுவகைப்படும்     என்றவாறாயிற்று அஃதேல்
பரத்தையிற்   பிரிவு  என்பதோ  எனின்,  அது  நிலம்  பெயர்ந்து      உறையாமையானும்,  இவைபோல்
சிறக்காமையானும்,   அறமுறைமை   செய்யப்   பிரிதலும்   பொருள்       காரணமாகப்  பிரிதலுமின்றிப்
பிரிதலினாலும், கற்பியலுள் கூறப்படும் என்க. ஈண்டும் சிறுபான்மை கூறுப.
  

நச்சினார்க்கினியர்
  

30. மேவிய...............பிரிவே
  

இது  முறையானே  தன்பகை  மேற்சென்ற  அரசன் திறைபெற்ற நாடுகாத்து அதன்கண் தன்னெறிமுறை
அடிப்படுத்துதற்குப் பிரிதலும் ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலுங்கூறுகின்றது.
  

(இ-ள்)  முல்லை  முதலாச்  சொல்லிய  மேவிய  சிறப்பின்தானே  சென்ற  வேந்தன்  தனக்கு முல்லை
முதலாக     மேற்கூறப்பட்ட  நால்வகை நிலனுந்    திறையாக    வந்து    பொருந்திய தலைமையானே;  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்