பக்கம் எண் :
தொடக்கம்
232தொல்காப்பியம் - உரைவளம்

திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை
வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார்
நகைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம்
மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்;
  

அறல்சாயய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித்
திறல்சான்ற பெருவனப் பிழைப்பதை யருளுவா
ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி
யாறின்றிப் பொருள் வெஃகி யகன்றநாட் டுறைபவர்; என நீ,
  

தெருமரல் வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
சேருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே.”  

(கலி-26)
  

இதனுள்   ‘ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு எனவே, முன்னர் ஆள்பவர்  கலக்குறுத்த அலைபெற்றுப் பின்
தன்னை  நிழலாகச்  சேர்ந்தாரென்பதூஉம்,  அவர்க்குப்  பின்னர்    உலைவு பிறவாமற் பேணிக் காத்தா
னென்பதூஉம்,   ‘விருந்து   நாட்டு’   என்பதனால்   திசைபெற்ற  புதிய    நாடென்பதூஉம்  பெற்றாம்.
ஏனையவற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க.
  

ஏதினொடு-புதியநாடு.     ஆறின்றிப்3 பகைவர் பொருளை    விரும்பின் நாட்டென்றும் அவரை யகன்ற
நாட்டென்றும்   பொருள்   கூறுக.   செருவின்   மேம்பட்ட4    என்றது  நாடுகளை.  அதனாற்  பெற்ற
வென்றியெனவே நாடு திறைபெற்றமை கூறிற்று.
  

“படைபண்ணிப்  புனையவும்”  பாலைக்கலியுள்  (17)  “வல்வினை வயக்குதல் வலித்திமன்” என்பதற்கு
வலிய போர் செய்து அப்பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலுத்தியென
  


3. அறநெறியின்றி  

4. செருவின் மேம்பட்ட-போரில் மேம்பட்டனவாகி நாடுகள்-வினையா லணையும் பெயர்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்