பக்கம் எண் :
தொடக்கம்
238தொல்காப்பியம் - உரைவளம்

என்புழி,   கலந்திறை   கொடுத்தோ   ரென்றலிற்   பகைவயிற்   பிரிவே   பொருள்  வருவாயாயிற்று.
ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க.
  

மேலோர்   முறைமை  ஏனோர்க்கு  முரித்தே  என்னாது  நால்வர்க்கு  முரித்தே  என்றது  முற்கூறிய
வணிகரை   யொழிந்த   இருவகை   வேளாளரையுங்  கூட்டியென்  றுணர்க.  அவர்    பொருள்  வயிற்
பிரிந்தனவுஞ் சான்றோர் செய்யுட்களை நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. அவர்களுள்   உழுதுண்பார்க்குக்
கலத்திற்பிரிவும் உரித்து. ஏனையோர்க்குக் காலிற் பிரிவே உரித்தென்றுணர்க.
  

பாரதியார் 
  

  31. மேலோர்..........................உரித்தே.
 

கருத்து:  இது,  வேந்தர்க்கும்  வேந்தரொடு  சிவணிய  சிறப்பின்  ஏனோர்க்கும்  உரிய  பிரிவெல்லாம்
அடியோர் கீழோரல்லா நானில மக்களனைவர்க்கும் உரியவென்றுணர்த்துகின்றது.
  

பொருள்: மேலோர் முறைமை - மேலே  வேந்தனென்றும்  வேந்தனொடு    சிவணிய ஏனோரென்றும்
மேவிய   சிறப்பினேனோரென்றும்   குறிக்கப்பட்ட   மேலோர்களுடைய  பிரிவு    பற்றிய  மரபெல்லாம்
நால்வர்க்கு முரித்தே தமிழகத்தில் நானில மக்களுக்கும் ஒப்பவுரியன.
  

குறிப்பு:     மேலோர் பிரிவு ஓதல் தூது, காவல்  பற்றியாமென்பதும் மேலிரு   சூத்திரங்கள் குறித்தன.
இதற்குப்  பிறர்  கூறும் வேறுபொருள்கள் சூத்திரக் கருத்தன்மை,  இளம்பூரணரும்   நச்சினார்க்கினியரும்
இச்சூத்திரத்திற்குத்  தம்முள் மாறுபடவுரை கூறுதலான் விளங்கும்.  மேலோர் தேவரென்பர்  இளம்பூரணர்
வணிகரென்பர்  நச்சினார்க்கினியர்  தேவரைப்பற்றிய  குறிப்பு   ஈண்டு   வேண்டப்படாமையானும் நான்கு
வருணத்தாருள்  வணிகர்  மேலோராக  மூன்றாம்  வகுப்பினரே     யாதலானும், இவ்வீருரையும் சூத்திரக்
கருத்தோடு  மாறுபடும். அது போலவே, நால்வர் என்பதை நான்கு    வருணத்தார் என்று இளம்பூரணரும்,
வணிகரை   விலக்கி   வேளாளரை   இருவகையராக்கி   அந்தணரரசரோடு    கூட்டி   நால்வர்   என
நச்சினார்க்கினியரும், தம்முள் மாறிக் கூறுவதும்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்