பக்கம் எண் :
தொடக்கம்
256தொல்காப்பியம் - உரைவளம்

கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்
என்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகாய் எம்மையும்
அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு
  

(பாலைக்கலி-6)
  

38.

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான  
(38)
 

ஆ.மொ.இல.
  

In any aspect of love the lady-love cannot have the
right of riding on the horse made of palmyra - stem.
  

இளம்பூரணர்
  

38. எத்திணை மருங்கினும்...............யான
  

இத்துணையும்  பாலைக்குரித்தாகிய  பிரிவிலக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருந்திணைக்கு, உரிய
இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)     எத்திணை  மருங்கினும்-எல்லாக்  குலத்தினிடத்தினும்  மகடூஉ  மடல்மேல்  (இல்லை)  -
பெண்பால்   மடலேறுதல்  இல்லை;  பொற்புடை  நெறிமை  இன்மையான  -  பொலிவுபெற  நெறிமை
இல்லாமையான்.
  

‘மடன்மேல்’     என்பது  மடலேறுதல்  என்னும்  பொருள்  குறித்தது.  இல்லை  என்பது  மேலைச்
சூத்திரத்தினின்று  தந்துரைக்கப்பட்டது.  ‘பொற்புடை  நெறிமை’  என்பது பெண்பாற்கு இன்றியமையாத
நாணம்  முதலாயின.  மகடூஉ  மடலேறுதல்  உண்டு  என்பது  பெற்றாம்  இது,  “புணரா  இரக்கமாகிய
கைக்கிளைக்கும்,   “தேறுதலொழிந்த   காமத்து   மிகுதிறன்”  (அகத்-51)  ஆகிய  பெருந்திணைக்கும்
உரித்தாகியவாறு கண்டு கொள்க.
  

(ஈற்றகரம் சாரியை)  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்