பக்கம் எண் :
தொடக்கம்
268தொல்காப்பியம் - உரைவளம்

நல்வினை நெடுகையர் கல்லெனக் கலங்கப்
பூப்புரை யுண்கண் மடவரற்
போக்கிய புணர்ந்த வறனில் பாலே.” 
  

(ஐங்-376)
 

இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால், பழவினை. இவை ஐங்குறுநூறு,
  

இனி     அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும்  புள்ளும்  ஆறலைப் போரும் முதலிய
கண்டு அஞ்சும் அச்சமுந், தந்தை தன்னையர் பின்சென்றவர் இஃதற  மென்னாது   தீங்கு செய்கின்றாரோ
என்று அஞ்சும் அச்சமுமென.
  

“நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக
புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை
மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும்
வெஞ்சுர மென்மக ளுய்த்த
வமபமை வல்வில் விடலை தாயே.” 
  

(ஐங்-373)
 

இதுவும் ஐங்குறு நூறு.
  

“கேளாய் வாழியோ மகளைநின் தோழி
திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு
பெருமலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்குதாள் உடைத்த பொலங்கெழு பூமி
பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன்பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக்
கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து
மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன்
கறவை தந்த கடுங்கான் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை
மடமயி லன்னஎன் நடைமெலி பேதை
தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண்
சேக்கோள் அறையுந் தண்ணுமை
கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே.”
  

(அகம்-63)
  

இவை அச்சம் கூறின.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்