பக்கம் எண் :
தொடக்கம்
ஏமப் பேரூர் சேரியும் சுரத்தும் சூ 40281

உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் சேலல் மாலைக் கொளைநடை யந்தணீர்
வெவ்விடைச் செலல்மாலைக் ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனுந்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும.”
  

(கலி-பாலை-8)
  

“செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்தாள்
மையணற் காளையொடு பைய இயலிப்
பாவை அன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அஞ்சிலம் படியே.”
  

(ஐங்குறு 389)
  

என வருவதும் அது,
  

“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.”
  

(குறுந்-44)
  

எனவருவது, சுரத்திடை வினாஅயது நிகழ்ந்த பின்னர்க் கூறியது.
  

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி*
  

நச்சினார்க்கினியர்
  

40. ஏமப்பேரூர்.......உளரே
  

(இ-ள்)     ஏமப்  பேர்  ஊர்ச்சேரியும்  சுரத்தும்-பதியெழுவறியாப்    பேரூரிற்1  றெருவின்கண்ணும்
அருவழிக்கண்ணும்;   தாமே   செல்லும்  தாயரும்  உளர்-தந்தையுந்     தன்னையரும்  உணராமுன்னம்
எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் என்றவாறு.
  


* முன்சூத்திரம்   நற்றாய்க்குரியது.   இச்சூத்திரம்     செவிலிக்குரியது.   ஆதலின்   எய்தியதன்மேற்
சிறப்புவிதி என்பது பொருந்தாது. இருவரும் தாயர்  எனப்படுதலின்    இவ்வாறு கூறினார் போலும்.  

1. தாம்  ஊரினின்றும்  மக்கள்  வாழ்வு வளம்வேண்டிப்பிற ஊர்க்கு அல்லது நாட்டிற்குச் செல்லுதலை
அறியாதபடிக்கின்பமும் காவலும் அமைந்த பேரூர்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்