பக்கம் எண் :
தொடக்கம்
324தொல்காப்பியம் - உரைவளம்

‘ஒன்றா’  என்னும்  பெயரெச்சம்  ‘பால்’  என்னும்  பெயர்  கொண்டு  முடிந்தது.  அது5 பொருள்வயி
னூக்கிய பால் என அடையடுத்து நின்றது.
  

நாளது   சின்மையை   ஒன்றாமையாவது,   யாக்கை   நிலையாது   என   உணரும்   உணர்ச்சியைப்
பொருந்தாமை.
  

இளமையது அருமையை ஒன்றாமையாவது.
பொறுதற்கரிய இளமை நிலையாது என
உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.
  

தாளாண்  பக்கத்தை  ஒன்றாமையாவது,  முயற்சியான்  வரும்  வருத்தத்தை   உணரும் உணர்ச்சியைப்
பொருந்தாமை.
  

தகுதியது   அமைதியை   ஒன்றாமையாவது,  பொருண்மேற்  காதல்  உணர்ந்தோர்க்குத்  தகாது  என
உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை.
  

இன்மையது இளிவை ஒன்றாமையாவது, இன்மையான் வரும் இளிவரவினைப் பொருந்தாமை.
  

உடைமையது  உயர்ச்சியை  ஒன்றாமையவாது,  பொருள்  உடையார்க்கு   அமைவு6  வேண்டுமென்றே,
அவ்வமைவினைப் பொருந்தாமை; அஃதாவது மென்மேலும் ஆசை செலுத்துதல்.
  

அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது சிறந்தார் மாட்டுச் செல்லும் அன்பினைப் பொருந்தாமை.
  

அகற்சியது அருமையை ஒன்றாமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை.
  

பொருள் தேடுவார் இத்தன்மைய ராதல் வேண்டுமென ஒருவாற்றான் அதற்கு இலக்கணங் கூறியவாறு.  


5 அது - பால்என்பது. ஒன்றாப் பொருள் என நச்சினார்க்கினியர் முடிக்கும் திறம் காண்க.
  

6 அமைவு சிந்தையின் நிறைவு.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்