பக்கம் எண் :
தொடக்கம்
326தொல்காப்பியம் - உரைவளம்

ஆகித்தோன்றும்  பாங்கோர்  பாங்கினும்  என்பது, தனக்குப் பாங்காகித் தோன்றுவார் பக்கத்துப்பிரியும்
வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும்8 வேந்தற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு.
  

மூன்றன்  பகுதியாவன,  நால்வகை   வலியினும்9 தன் வலியும் துணை வலியும்  வினைவலியும் என்பன.
அவை10 பகைவர் மாட்டு உள்ளன.
  

மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங்11 கொண்ட அருமை என்றவாறு.
  

தோன்றல் சான்ற என்பது (இவை) மிகுதல் சான்ற என்றவாறு.
  

மாற்றோர் மேன்மையாவது, மாற்றோரது உயர்ச்சியானும் என்றவாறு. ஆறன் உருபு எஞ்சி நின்றது.12
  

மூன்றன் பகுதியானும் மண்டிலத் தருமையானும் தோன்றல் சான்ற மாற்றோர் எனக் கூட்டுக.
  

பாசறைப் புலம்பல் என்பது, பாசறைகண் தலைமகன் தனிமை யுரைத்தல்13 என்றவாறு.  


8 அது என்றிருத்தல் வேண்டும் அதுவும் பிரிவு எனின் ஆம்.
  

9 தன்வலி, துணைவலி, வினைவலி, மாற்றான்வலி (குறள்-471)நச், உரை, பாரதியார் உரைபார்க்க.
  

10 தன்வலி, துணைவலி, வினைவலி
  

11 தமக்குப் பகைவரின் நாடு.
  

12 பிறவுருபுகளும் விரிக்கப்படும் நிலையில் இருத்தலின் ஆறன் உருபு எஞ்சிநின்றது என்றார்.
  

13 தனிமையுற்றதைத் தலைவன் தானே கூறுதல்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்