கூறுங் கூற்றுங் கூறுகின்றது. தமர் பருவஞ் சுரமென்னும் மூன்றற்கும் ஒன்றாவென்பதனையும் ஒன்றிய வென்பதனையுங் கூட்டி ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க.1 |
(இ-ள்) ஒன்றாத் தமரினும் - உடன் போக்கிற்கு ஒன்றாத் தாயர் முதலியோர் கண்ணும்; பருவத்தும் - இற்செறிப்பாற்புரம் போகற்கு ஒன்றாமையானுந் தலைவனொடு கூட்டம் பெறாது ஆற்றியிருக்கும் பருவம் ஒன்றாததானும் ஒன்றாப் பருவத்தின் கண்ணும்; சுரத்தும் - அரிய சேய கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுரத்தின் கண்ணும்; ஒன்றிய தோழியொடு வலிப்பினும் தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற் பின் தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு நொதுமலர் வரைவிற் காற்றாது உடன் போக்கிற்கேலாத கடுங்கோடையெனக்கருதாது கொண்டு தலைக்கழிதற்கு ஒன்றிய தோழியொடு தலைவன் ஆராய்ந்து உடன்போக்கினைத் துணியினும்; விடுப்பினும் - தலைவியை ஆற்றியிருப்பளெனக் கருதி உடன் கொண்டுபோகாது தலைவன் விடுப்பினும்; இடைச்சுர மருங்கின் அவள் தமர் எய்திக்கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பால்பட்ட ஒரு திறத்தானும் - தந்தையுந் தன்னையரும் இடைச்சுரத்திடத்தே பின் சென்று பொருந்தித் தலைவியைப் பெயர்த்தல் வேண்டுதலிற் றலைவி மிக வருந்தித் தமர் பாற்பட்டு உரையாடாது தலைவன் பாற்படுதலின் அவள் கற்பொடு புணர்ந்தமை சுற்றத்தாருஞ் சுரத்திடைக்கண்டோரும் உணர்ந்த வெளிப்பாடு உளப்படக் கொண்டு தலைக் கழிதற் கூற்றின் கட்பட்ட பகுதிக் கண்ணும். |
கடைக்கொண் டெய்தியென்க. கடை-பின்; தமரெனவே, தந்தை தன்னையரை உணர்த்திற்று “முன்னர்த் தாய்நிலை கண்டு தடுப்பினு” மென்றலின், தாயர்தாமே சென்றமை |
1 ஒன்றாத்தமரின் கண்ணும் ஒன்றிய தோழியொடு ஒன்றாப் பருவத்துக் கண்ணும் ஒன்றிய தோழியொடு, ஒன்றாச் சுரத்துக் கண்ணும் ஒன்றிய தோழியொடு எனக்கூட்டுக. |