பக்கம் எண் :
தொடக்கம்
348தொல்காப்பியம் - உரைவளம்

பொருள்   வலித்தலும்; அகற்சிய தருமையும் - அவளைப் பிரிந்திருக்க ஒல்லாமை பொருட் பிணியை
மெலித்தலும்;   ஒன்றாப்    பொருள்வயின்   ஊக்கிய   பாலினும்  -  ஆக  இவ்வாறு  (ஒன்றுக்கொன்று
மாறுபட்டுப்) பொருந்தாத  பொருள் பற்றி  வலிக்கும் பிரிவின்  பகுதிகளிலும்; வாயினுங் கையினும்  வகுத்த
பக்கமொடு   ஊதியங்கருதிய   ஒருதிறத்தானும்  நூல்  முதலிய   வாயாற்  கற்கும் கல்வியும் படை இயம்
ஓவியம்   முதலிய   கையாற் பயிலும் கலையும் என வகுக்கப்பட்ட இருதிறக்கல்விப்  பகுதிகளின்  பயனை
எண்ணிப்பிரியும்  ஒரு   பகுதிக்  கண்ணும்; புகழும்  மானமும் எடுத்து  வற்புறுத்தலும் - (இவ்விரண்டிலும்)
பிரிவால்   வரும்   புகழையும்   பிரியாமையால்   வரும்   குற்றத்தையும்   விலக்கி  வலியுறுத்துமிடத்தும்
தூதிடையிட்ட   வகையினானும்  -  தலைவியைப்பிரிந்து   வேந்தரிடை   செல்லும் வாயில்  வகைகளிலும்;
ஆகித்தோன்றும்   பாங்கோர்   பாங்கினும்  மூன்றன்  பகுதியும்-மேலே  கூறியாங்கு பொருள் ஓதல் தூது
என்ற   பிரிவின்   பகுதி   மூன்றிலும்   கூற்றுக்கு  அமைந்து   வரும்   பகுதிதொறும்   ஏற்றவிடத்தும்;
மண்டிலத்தருமையும்-பகைப்புலத்தின்  அருமையும்   தோன்றல் சான்ற  மாற்றோர்  மேன்மையும் - புகழாற்
சிறந்த  பகைவரின்  பெருமையும்,   பாசறைப்   புலம்பலும்  -   போர்க்களக்கட்டூரிற்   செரு முடிந்தபின்
தலைவியை  உள்ளும்  தலைவன்   தனிமையும்  முடிந்த   காலத்துப்  பாகனொடு   விரும்பிய  வினைத்
திறவகையினும்-வந்தவினை   முடிந்தபொழுது   தேர்ப்பாகனொடு  தலைவன்   தான்  செய்ய விரும்புவன 
கூறும்  வகையினும்;   காவற் பாங்கின்  ஆங்கோர் பக்கமும் - பிறர்நாடு காக்குமிடத்தானாம்  ஓர் பிரிவின்
கண்ணும்;  பரத்தையின   கற்சியிற்   பரிந்தோட்குறுகி-பரத்தைப்   பிரிவால்பிரியும்  தலைவியை  அணுகி;
இரத்தலும்  -  தன்  தவறு  பொறுக்குமாறு  கூறித்  தலைவியைத் தேற்றலும்; என இருவகையொடு - என
இவ்விரண்டு  வகையொடு  கூட;  உரைத்திற  நாட்டம்  -  மேற்கூறிய   இடங்களிலெல்லாம்  கூற்றுவகை
நாடுதல்; கிழவோன் மேன - தலைவன்கண் நிகழும்.
  

குறிப்பு:     இச்சூத்திரம்,   ஒன்றாத்தமரினும்,   என்பது   முதல்  ஒரு   திறத்தானும்  என்றதுவரை
உடன்போக்கில்    தலைவன்   கூற்று  நிகழுமிடங்களைச்   சுட்டும்   பகுதியும்,  பின்  எஞ்சியவெல்லாம்
பிரிவின்கண் தலைவன் கூற்று நிகழுமிடங்களைச்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்