கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரை நுசுப்பினாய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்! உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங் களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய் மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம் உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; அல்லல்கூர்ந் தழிபுக வணங்காகி யடருநோய் சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; எனவாங்கு, |
ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குமென் போல்வல்யா னீபடு பழியே.” |
(கலி-58) |
எனத் தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மைகூறி அவளது தீங்கெல்லாங் கூறுவான் மடலேறுவேன் போலுமென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கின்பமாதலிற் சொல்லி யின்புறலென்றார். இது புல்லித் தோன்றும் கைக்கிளையெனவே காமஞ்சான்ற இளமையோள்கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று.1 |
அஃது, “எல்லா விஃதொத்தன்” என்னுங் குறிஞ்சிக் கலியுள், |
“இவடந்தை காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டியது; பேதாஅய், பொருள் வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ |
1 காரணம் சொல்லி யின்புறல் இல்லை. |