பக்கம் எண் :
தொடக்கம்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் சூ.56449

பயன்     எய்துதல் வேண்டும்    என்பது   வெளிப்படையாகவும்   இளமை  தீர்ந்தும்  புணர்ச்சி விரும்பி
யொழுகுதல்  பொருந்தா  வொழுக்கமாகும்.  ஆதலின்  அதை  விடுத்துத்  துறவு   கொள்ளல்   வேண்டும்
என்பதும் குறிப்பதாகவும் கூறப்பட்டன.
 

56.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்

கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
1

உரியது ஆகும் என்மனார் புலவர்

(56)
 

ஆ.மொ.இல.
 

The    poets  say that the usage of poets which consists imaginary usage and the factual
usage as found in day - to - day life will have ‘Kali’ and ‘Paripadal’ as the matter - forms
(which are specially suitable for describing the love aspects).
 

நம்பி. 2 இல. அக.378.
  

அவைதாம்
புனைந்துரை உலகியல் எனுந்திறம் இரண்டினும்
தொல்லியல் வழாமல் சொல்லப் படூஉம்.
 

இளம்பூரணர்
 

56. நாடக வழக்கினும்.....................என்மனார் புலவர்.
 

இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.
 

(இ-ள்)    நாடக   வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்து கூறுதல்.
அஃதாவது  செல்வத்தானும்,   குலத்தானும்   ஒழுக்கத்தானும்,  அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின்
நீங்கித்  தனியிடத்து  எதிர்ப்பட்டார்   எனவும்,   அவ்வழிக்   கொடுப்போரு  மின்றி  அடுப்போருமின்றி
வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர்
 


1 பாங்கினும் - நச். பாடம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்