தானே ‘முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே-நுவலுங் காலை’ (தொல்-பொ-அகத்-3) என்று புகுந்தார் இவ்வாசிரியர்.5 |
இப் புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரானாட்டப்பட்ட தென்னாமோவெனின், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ்செய்யா தாகலானும், உடன் கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும், அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும். |
“வேந்துவினை யியற்கை பார்ப்பார்க் குரித்தே” |
(இறையனார்-37) |
“அரச ரல்லா வேனை யோர்க்கும் புரைவ தென்ப வோரிடத் தான” |
(இறையனார்-38) |
எனவும், |
“வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென் ருங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய” |
(இறையனார்-39) |
எனவும் நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலைமக்களையும் உணர்த்தலின் இல்லதென்ப தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்க, இக்கருத்தானே மேலும் ‘மக்கணுதலியவகனைந் திணையும்’ (தொல்-பொ-அகத்-54) என்பர். |
பாரதியார் |
52. நாடகவழ...................புலவர் |
கருத்து:- இது, உலகியல் வழக்கொடுபட்டதே புலனெறி வழக்கம் என்பதையும், அன்புத்திணைக்குச் சிறந்துரிய பாட்டு வகையையும் கூறுகிறது. |
பொருள்: நாடக வழக்கினும் - உலகியலை ஒட்டி உயர் குறிக்கோளோடு சுவைபடக் காட்டும். ‘பொருநு’ வகை மரபு |
5 சிவலிங்கனார் விளக்கம் பாக்க. |