பக்கம் எண் :
தொடக்கம்
454தொல்காப்பியம் - உரைவளம்

தானே   ‘முதல்கரு   வுரிப்பொரு   ளென்ற    மூன்றே-நுவலுங்  காலை’    (தொல்-பொ-அகத்-3)  என்று
புகுந்தார் இவ்வாசிரியர்.5
 

இப்     புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரானாட்டப்பட்ட   தென்னாமோவெனின், இல்லதென்று
கேட்டோர்க்கு  மெய்ப்பாடு   பிறந்து  இன்பஞ்செய்யா தாகலானும்,  உடன்  கூறிய உலகியல் வழக்கத்தினை
ஒழித்தல்  வேண்டு  மாகலானும்,    அது  பொருந்தாது.  அல்லதூஉம்    அங்ஙனங்கொண்ட  இறையனார்
களவியலுள்ளும்.
 

“வேந்துவினை யியற்கை பார்ப்பார்க் குரித்தே”

(இறையனார்-37)
 

“அரச ரல்லா வேனை யோர்க்கும்
புரைவ தென்ப வோரிடத் தான”

(இறையனார்-38)
 

எனவும்,
  

“வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
ருங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய”

(இறையனார்-39)
 

எனவும்    நான்கு  வருணமுங்  கூறி,   நால்வகைத்   தலைமக்களையும்   உணர்த்தலின்    இல்லதென்ப
தொல்லாசிரியர் தமிழ்  வழக்கன்றென  மறுக்க,  இக்கருத்தானே  மேலும்  ‘மக்கணுதலியவகனைந் திணையும்’
(தொல்-பொ-அகத்-54) என்பர்.
 

பாரதியார்
 

52. நாடகவழ...................புலவர்
 

கருத்து:-  இது,  உலகியல்   வழக்கொடுபட்டதே  புலனெறி  வழக்கம் என்பதையும், அன்புத்திணைக்குச்
சிறந்துரிய பாட்டு வகையையும் கூறுகிறது.
 

பொருள்:   நாடக  வழக்கினும்  -  உலகியலை  ஒட்டி  உயர்  குறிக்கோளோடு  சுவைபடக்  காட்டும்.
‘பொருநு’ வகை மரபு
 


5 சிவலிங்கனார் விளக்கம் பாக்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்