பக்கம் எண் :
தொடக்கம்
46தொல்காப்பியம் - உரைவளம்

நிரனிறை3     உம்மை4   எதிமறையாகலான்    இம்முறையன்றிப்    பிறவாய்பாட்டாற்    சொல்லவும்படும்
என்றவாறு.  காடு நாடு மலை கடல்  என்பதே  பெரு  வழக்கு.  இன்னும் “சொல்லிய முறையாற் சொல்லவும்
படும்”  என்றதனான்,  இம்முறையன்றிச்   சொல்லவும்  படும்  என்று   கொள்க.   அஃதாவது   அவற்றுள்
யாதானும்  ஒன்றை  முன்னும்  பின்னுமாக வைத்துக்  கூறுதல்.  அது  சான்றோர்  செய்யுட்  கோவையினும்
பிற  நூலகத்துங்  கண்டு  கொள்க.5  இச்  சூத்திரத்துள்  காடுறை  நிலம்  என்னாது  உலகம் என்றதனான்
ஐவகைப் பூதத்தானும் ஐந்து இடம் என்பது உய்த்துணர வைத்தவாறு கண்டு கொள்க.
  

முல்லை   குறிஞ்சி   என்பன   இடுகுறியோ,   காரணக்  குறியோ  எனின்,  ஏகதேச  காரணம்6  பற்றி
முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும். என்னை காரணம் எனின்’
  

“நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்”

(முல்லைப்பாட்டு -8-10)
 

என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆகலானும்.
  


3. காடுறையுலகம்  முதலிய  நான்கும்  நேர்  வரிசை  முறையில்  முல்லை  முதலியவற்றிற்கு  இயைதல்
நிரல்நிறையாகும்.

4. சொல்லவும்  என்பதில்   உள்ள   உம்மை   முல்லை   குறிஞ்சி  மருதம்  நெய்தல்  என்ற  பெயர்
முறைகளாற் சொல்லப்படுதலேயன்றிப் பெருவழக்கான  காடு  நாடு  மலை  கடல்  என்ற  பெயராலும்
சொல்லப்படும் என்பதாம்.

5. கலித்தொகை: பாலை, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்.  

ஐங்குறுநூறு : மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை.

ஐந்திணை எழுபது: குறிஞ்சி  முல்லை  பாலை  மருதம்  நெய்தல். இப்படி முறையன்றிக் காணப்படுதல்
                காண்க.  

6. ஏகதேச காரணம் - ஏதோ ஓர் காரணம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்