இனிக் காலத்தால் திணையாமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். இஃது அவற்றுள் முல்லைத்திணைக்குக் காலம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) காரும் மாலையும் முல்லை கார்காலமும் மாலைப்பொழுதும் முல்லைத் திணைக்குக் காலமாம். |
காராவது மழை பெய்யுங்காலம், அஃது ஆவணித் திங்களும் புரட்டாசித் திங்களும், மாலையாவது இராப் பொழுதின் முற்கூறு. |
7.குறிஞ்சி, கூதிர்..................புலவர். |
இது குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று, |
(இ-ள்) குறிஞ்சி - குறிஞ்சித் திணைக்குக் காலமாவது, கூதிர் யாமம் என்மனார் புலவர் - கூதிர் காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புலவர். |
கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகை திங்களும். |
யாமமாவது இராப்பொழுதின் நடுக் கூறு. |
நச்சினார்க்கினியர் |
6. காரு மாலையு...................புலவர். |
இது முதலிரண்டனுள் நிலங் கூறிக் காலங் கூறுவான் முல்லைச்குங் குறிஞ்சிக்கும் பெரும் பொழுதுஞ் சிறுபொழுதுங் கூறுதல் நுதலிற்று. |
இதன் பொருள் :- காரும் மாலையும் முல்லை - பெரும் பொழுதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லையெனப்படும்; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் - பெரும் பொழுதினுட் கூதிர்க் காலமுஞ் சிறுபொழுதினுள் அதன் இடையாமமும் குறிஞ்சி எனப்படும் என்றவாறு. |
முதல்கரு உரிப்பொருளென்னும் மூன்று பாலுங் கொண்டு ஓர் திணையாமென்று கூறினாரேனும் ஒரு பாலினைந்திணையென்று அப்பெயரானே கூறினார்; வந்தான் என்பது உயர் |