பக்கம் எண் :
தொடக்கம்
அகத்திணையியல் சூ.19

பெருங் கிளைமை 3ஆயிற்று. முல்லை முதலாகிய ஐந்தும் முன்னர்க் கூறப்படும்.
  

பெருந்திணை     நடுவண்   ஐந்திணையாகிய   ஒத்த  காமத்தின்  மிக்கும்  குறைந்தும்  வருதலானும்,
எண்வகை   மணத்தினும்   பிரமம்    பிரசாபத்தியம்  ஆரிடம்   தெய்வம்   என்பன   அத்திணைப்பாற்
படுதலானும்,  இந்நான்கு  மணமும்  மேன்மக்கள்  மாட்டு நிகழ்தலானும்  இவை  உலகினுள்  பெருவழக்கு
எனப்   பயின்று   வருதலானும்   அது   பெருந்திணை   எனக்   கூறப்பட்டது.  4அஃதேல்    நடுவண்
ஐந்திணையாகிய  ஒத்த  கூட்டம்  பெருவழக்கிற்றன்றோ  எனின்,  அஃது  அன்பும்   குலனும் முதலாயின
ஒத்து வருவது உலகினுள் அரிதாகலின் அருகியல்லது வாராது என்க.
  

இந்நூலகத்து   ஒருவனும்  ஒருத்தியும்  நுகருங்  காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும்
இளமையும்  அன்பும்  ஒருங்கு  உளவழி 5இன்பம்  உளதாம்  எனவும்,  கைக்கிளை,  ஒரு தலை வேட்கை
எனவும்,   பெருந்திணை   ஒவ்வாக்   கூட்டமாய்   இன்பம்   பயத்தல்   அரிது   எனவும்   கூறுதலான்,
இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து உணர வைத்தவாறு அறிந்து கொள்க.
  

நச்சினார்க்கினியம்
  

1. கைக்கிளை....... .... யென்ப.
  

என்பது சூத்திரம்.


3. பெருங் கிளைமை-பெருமைதரும் உறவு.

4. ஒத்த   காமத்தின்    மிக்கும்   குறைந்தும்  வருவது  பெருந்திணை   என்பதால்  அதுபொருந்தாக்
காமத்தின்பாற்படும் - பின்னர்க் கூறப்படும் காரணங்கள் அதற்கு மாறுபட்டன. பொருத்தம் அற்றன.

5. ஒருங்கு உள்வழி இன்பம் உளது என்பதால்  ஒருங்கு  உளதாவது  அரிது  எனக்குறித்து  இன்பத்தின்
அருமை கூறு முகத்தால் காமத்துப்பயன் இன்மை குறித்தார் என்பதால் ஐந்திணை இன்பமும் பயனின்று
என்று குறித்தவாறு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்