தொல்காப்பியம் - பொருளதிகாரம் (உரைவளம்)
|
அகத்திணையியல் |
1. | கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப. | (1) |
|
ஆங்கில மொழிபெயர்ப்பு இலக்குவனார். |
From ‘Kaikkilai’ to ‘Perunthinai’ are the Seven conducts described foremost, say the scholars. |
பிற்கால இலக்கண நூல்கள்: நம்பி அகப்பொருள்: 1 |
மலர்தலை யுலகத்துப் புலவோர் ஆய்ந்த அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும். |
இலக்கண விளக்கப் பொருள் : அகத்திணையியல். 4. |
அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப் பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும். |
தொன்னூல் விளக்கம் 190. |
அகப்பொருள் புறப்பொருள் ஆயிரண்டவற்றுள் பெருகிய கைக்கிளை பெருந்திணை குறிஞ்சி ஆதிஐந் திணையென அகப்பொருள் ஏழே....... |
முத்து வீரியம் அகத்திணை 1. |
அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை எனஎழு வகைப்படும் என்மனார் புலவர். |