பக்கம் எண் :
தொடக்கம்
ஏவல் மரபின் ஏனோரும் உரியர் சூ.26207

தொழில்களைச் செய்வார் பக்கத்தும் இதுகாறும்
கூறிவந்த முதல்கரு உரிப்பொருள்களும்
கிளவித் தலைமக்கள் பெயரும் அகன்ஐந்
திணைக்குப் புறத்தேயாம் என நீக்கப்படா;
அகன்ஐந்திணைக்கு உரியவாகக்கொள்ளப்படும்”.

  

என்பது     இச்சூத்திரப்     பொருள்    எனவே    நான்கு    நிலத்தும்   வாழும்   மக்கள்   யாவரும்
அகன்ஐந்திணைக்கும் உரியர் என்பதாம், அடுத்த சூத்திரமும் இதுபோல்வதே.
  

பாரதியார் கருத்து முற்றும் பொருந்தும்.
  

26. 

ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய
நிலைமை யாவரும் அன்னர்
(26)

  

ஆ. மொ. இல.
  

Others who are in the position of commanding
others are in a similar state.
  

இளம்பூரணர்
  

26. ஏவல் மரபின்..................அன்னர்
  

இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  ஏவல்  மரபின் ஏனோரும் உரியர் - ஏவுதல்1 மரபையுடைய ஏனையோரும்2 உரியர்3; அவரும்
ஆகிய நிலைமை அன்னர்-அவரும் உரியராகிய நிலையை அத்தன்மையராகலான்
  

அவருமாகிய  நிலைமை  என  மொழி  மாற்றுக.  கைக்கிளை  பெருந்திணை  என்பது அதிகாரத்தான்
வந்தது. இதனாற் சொல்லியது. தலை மக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு
  


1. ஏவுதல் அடியோரையும் வினைவலரையும் ஏவிக்கொள்ளுதல்.
  

2. ஏனையோர் - தலைமக்கள்
  

3. உரியர் - கைக்கிளை பெருந்திணைகளுக்கு உரியர்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்