பக்கம் எண் :
தொடக்கம்
218தொல்காப்பியம் - உரைவளம்

பொருள்:-  ஓதல்  பகையே  தூது  இவை  =  கல்வி  கற்றலும்,  பகை  கடியப் பொருதலும், தம்முள்
பகைத்த  பிறரைப்    பொருத்தற்பொருட்டு  வாயிலாகச்  செல்லுதல்  ஆகிய  இவை; பிரிவே = பிரிதற்கு
நிமித்தமாய்ப் பாலைத் திணையாகும்.
  

குறிப்பு:-     இதில்    ஏகாரமிரண்டும் அசை ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப்
பிரிதல் பகைவயிற்  பிரிதலாவது   தன்னாட்டிற்கும்  தன்னரசற்கும் பகையாவாரோடு போர் கருதிப் பிரிதல்,
தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருத்தற் பொருட்டுப் பிரிதல்.
  

28.   

அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. (28)
 

ஆ. மொ. இல.
  

Amont them higher education and Ambassadorship are
concerned with eminent people (higher intelligentia)
  

பி.இ.நூ.
  

இறை 36
  

அவற்றுள்
ஓதலுந் தூதும் உயர்ந்தோர்க்குரிய.
  

நம்பி. 69
  

ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும்.
  

இல. வி. அ. 65  - -
  

நம்பி 75
  

வேத மாந்தர் வேந்தர்என் றிருவர்க்கும்
தூது போதல் தொழில்உரித் தாகும்.
  

இல.வி.அக.43, 44
  

மறையோர் மன்னர் வணிகர்வே ளாளருள்
ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மேன.
எல்லார்க்கும் உரியன இவையல பிறவே.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்