பாரதியார் |
34. வேந்துவினை..............................உடைத்தே |
கருத்து:- இது, முடியுடை வேந்தரல்லாத குறுநில மன்னர்க்குப் பிரிவுவகை கூறுகின்றது. |
பொருள்:- வேந்துவினையியற்கை- முடிமன்னரின் பிரிவுக்குரிய வினைபியல்பு: வேந்தனின் ஒரீஇய-அவ்வேந்தரின் வேறாய; ஏனோர் மருங்கினும்-பிறவேளிர் முதலான குறுநில மன்னரிடத்தும்; எய்திடனுடைத்தே-பொருந்துதல் உரித்தாகும். |
குறிப்பு:- ஈற்றேகாரம் அசை. |
குறுநில மன்னர் பிறநாடு கொள்ளப் போர்மேற் செல்லும் பிரிவுக்குப் பாட்டு: |
“விலங்கிருஞ் சிமையக் குன்றத் தும்பர் வேறுபல மொழிய தேஎம் முன்னி விண்நசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புணமாண் எஃகம் வலவயி னேந்திச் செலமாண் புற்றநும் வயின்வல்லே வலனா கென்றலும் நன்றுமற் றில்ல இறங்கு குடிக்குன்ற நாடன் |
(அகம்-215) |
இவ்வாறே மற்றைப் பிரிவுகளும் வந்துழிக்கண்டு கொள்க. |
35. | பொருள் வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே1 | (35) |
|
36. | உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்2 | (36) |
|
ஆ.மொ.இல. |
(முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க) |
Separation for earning wealth belongs to them if they are after the wealth of the superior order. |
பி.இ.நூ. |
இறை 39 |
வேந்தர்க் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவு என்று ஆங்க இரண்டும் இழிந்தோர்க்குரிய. |
1,2 இவ்விரு சூத்திரங்களையும் ஒரு சூத்திரமாகக்கொள்வர் நச்சினார்க்கினியரும் பாரதியாரும். |