பக்கம் எண் :
தொடக்கம்
376தொல்காப்பியம் - உரைவளம்

எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு
பரியல்; வாழ்கநின் கண்ணி; காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
வண்பரி தயங்க வெழீ இத்தண் பெயற்
கான்யாற் றிடுமணற் கரைபிற் கொழிய
வெல் விருந் தயரு மனைவி
மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே”
 

பாணன் கூற்றிற்குப் பாட்டு வருமாறு:
 

“நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு
நீயும் குருசிலை யல்லை மாதோ;
நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி
ஈரித ழுண்கண் உகுத்த
பூசல் கேட்டு மருளா தோயே.”

(ஐங்-480)
 

கீழ்வரும்  அயலோர்  கூற்று  ‘ஊரும்  அயலும்’  என்னும்  செய்யுளில்  (503) சூத்திரத்திற்கு மாறான
பிற்கால வழக்காகும்.
8
  

“துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மளைக ணாட்டி!
எவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மகளே,
வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே.”

(ஐங்-393)
 

இது, உடன்போய்த் தலைமகள் மீண்டுவந்துழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது.
 

  

46. 
  

நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் (46)

ஆ.மொ.இல.
  

What happened once may be thought of again
  

இளம்பூரணர்
  

46. நிகழ்ந்தது......................ஏதும் ஆகும்.
 

இதுவும் பாலைக்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று
 
  


8 ஊரவரும்   அயலவரும்  கூறுவன  அவராலேயே  நேரே கூறப் பட்டனவாகச் செய்யுளில்வாரா பிறர்
கொண்டு கூறுவனவாகவே வரும் என்பது  அச்சூத்திரப் பொருள். கீழ்வரும் செய்யுள் அயலோர் நேர்
கூற்றாகவருவது தொல்காப்பியர்க்குப் பிற்கால வழக்கு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்