பக்கம் எண் :
தொடக்கம்
மரபுநிலை திரியா மாட்சிய வாகி சூ.48391

எல்லாத்திணைக்கும்   இச்சூத்திரம்   பொதுவாகாது.   எல்லாத்   திணையிலும்  பிரிவு  உண்டு.  எனினும்
குறிப்பிட்டு ஒரு திணையிற் சார்த்த வேண்டுமாயின் பாவையிலேயே சார்த்தப்படும்.
  

48.

மரபு நிலை திரியா மாட்சிய வாகி
விரவும் பொருளும் விரவும் என்ப.

(48)
 

ஆ.மொ.இல.
 

Without violating the traditional way of making
literature new additions may form the themes
of expression
 

இளம்பூரணர்
  

48. “மரபுநிலை திரியா....................என்ப”
 

இதுவும் அது.
 
 

(இ-ள்)  மரபு  நிலை  திரியா  மாட்சிய  ஆகி  விரவும் பொருளும் விரவும் என்ப மரபு-நிலை திரியாத
மாட்சிமை யுடையவாகி விரவும் பொருளும் விரவும் என்ப.

 

அஃதாவது   பாலைக்கு   ஓதிய   பாசறைப்   புலம்பற்கண்ணும்   தேர்ப்பாகற்குக்   கூறுதற்கண்ணும்,
முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம். 
1இந்நிகரான பிறவுங் கொள்க.
 

மரபுநிலை  திரியாமையாவது,  பாசறைக்கண்  வினை  முடித்த வழிக் கார்காலம் வந்ததாயின் ஆண்டுக்
கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு நிலை திரியாதாயிற்று.

 

“வேந்து வினை முடித்த” என்னும் அகப்பாட்டினுள் (14) கண்டு கொள்க.
 

இன்னும்  ‘மாட்சிய  ஆகி  விரவும்’  பொருளும்  விரவும்  என்றதனால்  பாசறைக்கண்  தூது  கண்டு
கூறுதலும் தலைமகளை இடைச்சுரத்து நினைத்துக் கூறுதலுங் கொள்க.

 


1 இது பொருந்தாது திணைமயக்கமாதலின் நச்சினார்க்கினியரும் பாரதியாரும் கூறுவன பொருந்தும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்