பக்கம் எண் :
தொடக்கம்
408தொல்காப்பியம் - உரைவளம்

பொருளைக்     குறிப்பிற்காட்டுவது   உள்ளுறை.   பொருளும்   வெளிப்படையாக  அமைய  வருவது
ஏனையுவமம்.    ஏனையுமவத்திற்   காணப்படும்   வெளிப்படைப்   பொருளே   திணையுணர்த்துமாதலின்
உவமம் திணையுணர்த்தத் தேவையில்லை.

 

50.

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலமெனக்1
கொள்ளும் என்ப குறியறிந் தோரே
2

(50)
 

ஆ.மொ.இல.
 

‘Ullurai’ will have all ‘Karupporuls’ except God as
the place of its origin-so say the scholars well-versed
in science of literature.
 

பி.இ.நூ.
 

அடுத்த சூத்திரத்துக் காண்க.
 

இளம்பூரணர்
 

50. உள்ளுறை தெய்வம்................தோரே.
  

இஃது உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 

(இ-ள்)    உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை உள்ளுறையாவது  கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை,
நிலம்   என  கொள்ளும்  என்ப   குறி  அறிந்தோர்  -  இடமாகக்   கொண்டுவரும்  என்று சொல்லுவர்
இலக்கணம் அறிந்தோர்.
 

(50)
 

குறி-இலக்கணம்
 

நச்சினார்க்கினியார்
 

50. உள்ளுறை...உணர்ந்தோரே.
 

இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது.
 

(இ-ள்)   உள்ளுறை - உள்ளுறை  யெனப்பட்ட  உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும்
என்ப -  தெய்வ  முதலிய  கருப்பொருளும்  டெய்வத்தை  ஒழித்து கருப்பொருள்களே தனக்குத் தோன்றும்
நிலனாகக் கொண்டு புலப்படு
 


1 நிலனெனக் -நச், பாடம்

2 குறியுணர்ந்தோரே-பாடம்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்