பக்கம் எண் :
தொடக்கம்
414தொல்காப்பியம் - உரைவளம்

கொண்டு  சென்று,  அவளைத்  தன்   மனையில்   கற்பறம்   சிறக்கத்  காதலால்  மணந்து நன்மையைத்
தந்தான் என்பது உள்ளுறுத்து ஒத்து முடிவதால். இது உள்ளுறை உவமமாமாறு காண்க.

 

52.

ஏனை உவமம் தான் உணர் வகைத்தே (52)
 

ஆ.மொ.இல.
 

The other ‘Uvamam’ is easily understood.
 

பி.இ.நூ.
 

நம்பி. 239, இல.வி.அ.215
 

வெளிப்படை யுவமம் வினைபயன் மெய்யுரு
வெளிப்பட நின்று விளங்குவ தாகும்.
 

இளம்பூரணர்
 

52.  ஏனை உவமம்....................வகைத்தே
 

இஃது ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
 

(இ-ள்) ஏனை உவமம்தான் உணர்வகைத்து உள்ளுறை-யொழிந்த உவமம்தான் உணரும் வகையான் வரும்.
 

தான்   உணரும்    வகையாவது,   வண்ணத்தானாதல்   வடிவானாதல்  பயனானாதல்  தொழிலானதால்
உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல் (ஏகாரம் ஈற்றசை)

 

அது வருமாறு உவமவியலுட் கூறப்படும்
இதனால் திணை உணருமாறு;
 

“வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை யென்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.”

(ஐங்குறு-369)
 

இஃது   ஊடற்  பொருண்மைத்தேனும்,  வேனிற்காலத்து  நிகழும்  குயிற்குரலை  உவமித்தலிற் பாலைத்
திணையாயிற்று. மரவம்-குராமரம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்