இனிக் கூதிரும் யாமமும் குறிஞ்சிக் காதற்குச் செய்யுள் வருமாறு:- |
“சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட் பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் பிறரும் கேட்குந ருளர்கொல்? உறைசிறந் தூதை தூற்றுங் கூதிர் யாமத் தானுளம் புலம்புதொ றுளம்பும் நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.” |
(குறுந்-86) |
இதில் கூதிரும் யாமமும் கூடுதலாகிய காலம் குறிஞ்சிக் குரித்தெனல் காண்க. “காம மொழிவதாயினும்” எனும் கபிலர் குறும்பாட்டில் (42) யாமமும். “யாது செய்வாங்கொல் தோழி” எனும் நன்னாகையார் குறும்பாட்டில் (197) கூதிரும் குறிஞ்சிக்குரித்தாதல் குறிக்கப்படுதலுமறிக. |
8. | பனியெதிர் பருவமும் உரித்துஎன மொழிப | (8) |
|
ஆ. மொ. இல. |
The dewy season also belongs to ‘Kurinji’ - say the scholars. |
பி.இ.நூ. |
நம்பி 13. |
கூதிர் யாமம் முன்பனி என்றிவை ஓதிய குறிஞ்சிக் குரிய வாகும். |
இல.வி.அ. 14. |
கூதிர் யாமம் முன்பனி என்றிவை ஓதிய குறிஞ்சிக் குரிய வாதலும். |
முத்து அக 14, 15 |
கூதிரும் யாமமும் குறிஞ்சிக் குரிய பனி யெதிர் பருவமும் உரிய தாகும். |
இளம்பூரணர் |
8. பனிஎதிர்..................மொழிப. |
இஃது எய்தாதது எய்து வித்தல் நுதலிற்று. |