அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும்
மயங்கல்
 

102.

அச்சக் கிளவிக் கைந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயி னான.

 

என் - எனின்,   ஐந்தாவதும்   இரண்டாவதும்    மயங்குமாறுது
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அஞ்சுதல்   என்னும்   பொருண்மைக்கு  ஐந்தாவதும்,
இரண்டாவதும்  தம்மில்  ஒத்த  நிலைமையவாம்  பொருள்படுமிடத்து
என்றவாறு.

(எ - டு.) புலி   அஞ்சும் என்பது  புலியை யஞ்சும்  என விரியும்.
அவ்வச்சம்   கள்ளரின்  அஞ்சும்  என்னும்  வழக்கிற்  பொருள்படு
நிலைமையும் உண்டு; ஈண்டு அது கொள்ளற்க.

ஓம்படை என்றதற்கண் கூறியவற்றால்  புலியான்  அஞ்சும்   என
மூன்றாவதன் வரவும் கொள்க.                             (17)

******************************************************************