என் - எனின், உருபுகள் ஒரோவழித் தம் பொருண்மையின்றி மயங்குதலுடைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஒருபொருண்மை யாதானும் ஓர் உருபினால் கூறப்பட்டதாயினும் அப்பொருண்மை அவ்வுருபினதாகாது அப்பொருள் செல்லும் கூற்றினையுடைய வேற்றுமை ஆண்டுவந்து சார்ந்த அப்பொருளினைக் கொள்ளும், (எ - று.) (எ - டு.) “கிளியரி நாணற் கிழங்குமணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்” (அகம் 212) என்னும் பாட்டினுள், மணலுள் ஈன்ற என்பது மணற்கீன்ற என்றாயிற்று. இவ்வாறு பொருளன்றியும் மயங்கும் என்றதால் வேண்டியவாறெல்லாம் வரப்பெறும் என்றவாறாம் பிற எனின், அதுவன்று; வழக்குள்வழிய தம்முடிபு எனக் கொள்க. (23)
1. இந் நூற்பாவினை நன்னூலார் அப்படியே கொண்டெடுது ‘மொழிந்துள்ளார் (நன் - பெயரியல் - 60) |