ஒன்றன்பால் ஈறு
 

8.

ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்

என் - எனின்     உயர்திணைச்    சொல்லாமாறுணர்த்தி,    இனி
அஃறிணைச் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒன்றினை  யறியுஞ்  சொல்லாவது  த ற டக்க ளென்கிற
வொற்றுக்களை    யூர்ந்துவருகிற    குற்றியலுகரமாகிய   வெழுத்தினை
யீறாகவுடைய சொற்கள், (எ - று.)

(எ - டு) உண்டது, உண்ணாநின்றது,   உண்பது,  கரியது,  செய்யது
எனவரும்.  இவை  தகரமூர்ந்துவந்த  குற்றியலுகர  ஈற்றவாம்.  கூயிற்று,
தாயிற்று, கோடின்று, குளம்பின்று  எனவரும் :  இவை  றகரமூர்ந்துவந்த
குற்றியலுகர  ஈற்றவாம்.  குண்டுகட்டு,  கொடுந்தாட்டு  எனவரும். இவை
டகரமூர்ந்துவந்த குற்றியலுகர ஈற்றவாம்.

மற்று     ட த ற  என்று  எழுத்துக்  கிடக்கைமுறையாற்  கூறாதது
என்னை   எனின்   ,    தகரம்    மூன்றுகாலமும்,   வினைக்குறிப்புங்
கோடலான்    முன்வைக்கப்பட்டது.     றகரம்    இறந்தகாலமென்றும்,
வினைக்குறிப்புங்   கோடலான்  அதன்பின்   வைக்கப்பட்டது.   டகரம்
வினைக்குறிப்பல்லது கோடலின்மையின் அதன்பின் வைக்கப்பட்டது.

உகரத் திறுதி - உகரமாகியவிறுதி  யெனப்  பண்புத்தொகை.  அத்து:
அல்வழிச்சந்தி.  உகரவீற்றுச்சொல்லிற்கு  உகர  விறுதி  யென்பது  இரு
பெயரொட்டுப்   பண்புத்தொகை   குற்றியலுகரம்   என்பது   மெலிந்து
நின்றது.                                                  (8)

******************************************************************