என் - எனின், அவ்வுருபுகள் ஒருசாரன செய்யுளுள் திரிபுபட நிற்றலுடைமைகண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கு என்றும், ஐ என்றும், ஆன் என்றும் சொல்ல வருகின்ற உருபு ஈறுகள் அகரத்தோடு பொருந்தி ஈறுதிரிந்து நிற்றலும் உடைய, செய்யுளிடத்து என்றவாறு, அவைகளை முன்னர்ச் சொல்லுதும், (25) |