மற்றையுருபுகளும் தம்முள் மயங்குமெனல்
 

113.

ஏனை உருபும் அன்ன மரபின
1மானம் இலவே சொல்முறையான.
 

என் -   எனின், நான்காவ    தொழித்து   ஒழிந்த   வேற்றுமை
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நான்காவது   ஒழிந்த  உருபுகள் ஐந்தும்,  நான்காவது
போலப்  பல வேற்றுமைப் பொருட்கண்ணும் சென்று மயங்குமிடத்துக்
குற்றம் இல்லை.  அவ்வாறு   சொல்லிவரும்   வழக்குமுறைமைக்கண்,
(எ -று.)

வழக்கினுளவேல் கண்டுகொள்க என்பன  காணமையின்  காட்டா
மரபினவாம்.                                         
(28)


1. மானம்  -  குற்றம்  என்றே  உரை  கொண்டனர் அனைவரும்.
ஆனால், ‘ஆனம்’ என்ற சொல்லிற்கே குற்றம் என்ற பொருள் உண்டு
என்றும்,  எனவே  மானம் என்பது ‘ஆனம்’ என்றிருத்தல் வேண்டும்
என்றும் கூறுவர் திரு.பி.சா.சு.அவர்கள்.

******************************************************************