என் - எனின், நான்காவ தொழித்து ஒழிந்த வேற்றுமை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நான்காவது ஒழிந்த உருபுகள் ஐந்தும், நான்காவது போலப் பல வேற்றுமைப் பொருட்கண்ணும் சென்று மயங்குமிடத்துக் குற்றம் இல்லை. அவ்வாறு சொல்லிவரும் வழக்குமுறைமைக்கண், (எ -று.) வழக்கினுளவேல் கண்டுகொள்க என்பன காணமையின் காட்டா மரபினவாம். (28)
1. மானம் - குற்றம் என்றே உரை கொண்டனர் அனைவரும். ஆனால், ‘ஆனம்’ என்ற சொல்லிற்கே குற்றம் என்ற பொருள் உண்டு என்றும், எனவே மானம் என்பது ‘ஆனம்’ என்றிருத்தல் வேண்டும் என்றும் கூறுவர் திரு.பி.சா.சு.அவர்கள். |