மேலதற்கோர் புறனடை
 

115.

அவைதாம்,
வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும்
 

என் - எனின், மேலதற்கோர் புறனடையுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற் சொல்லப்பட்ட எண்வகை இலக்கணமும் வழக்கு
நடத்துமிடத்துக் குறைவன குறைந்துவரும், (எ - று.)

(எ - டு.)கொடி ஆடிற்று என்பது.

செயப்படுபொருளும்     இன்னார்க்கு  என்பதும்  இது  பயனாக
என்பதும்  இல்லை.  துஞ்சும்  என்புழியும்  குன்றின  உள.  பிறவும்
அன்ன.                                              (30)

******************************************************************