ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு
 

125.

1ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும்.
 

என்  -   எனின்,   ஒழிந்த   இரண்டு   ஈறும்   விளி  ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஓகார   ஈற்றுப்   பெயரும்  உகர    ஈற்றுப்  பெயரும்
ஏகாரத்தோடு பொருந்தி விளியேற்கும், (எ - று.)

(எ- டு.) கோ  -  கோவே   எனவும்,  வேந்து  - வேந்தே எனவும்
வரும்.

இவை பிறிது வந்தடைதல்.                                 (5)


1. இதனையும்  அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வர் தெய்வச்சிலையார்.

******************************************************************